Sunday 7 December 2014

Saneeswarar Manthirankal

சனி கவசம்

..............................................................................................................................................................................................................................

சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம்

கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்!
 --------- (1)
சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்!
 --------- (5)

ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! --------- (2)
குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! 
 --------- (6)

பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே!
 --------- (3)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே!  சனியே!  உன்னை
மனதார  போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! 
 ---------  (7)
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! --------- (4)
மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! --------- (8)
ஸ்ரீ சனீஸ்வர பகவான் மந்த்ராஸ்
மோல மந்த்ரா :
ஹரிம் ஸ்ரீம் க்ரஹா சக்ர வர்தினே சனிச்சராய கலீம் இம் சஹா ஸ்வாஹா

புரானிக் மந்த்ரா :
நீலாஞ்சன சமாபாசம்
ரவிபுத்ரம் யமாக்ராஜம்
சஹாயா மார்தாண்ட சம்பூதம்
தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்
வேதிக் மந்த்ரா :
ஓம் சாம் நோ தேவீர் அபிஷ்டாய
ஆபோ பவந்து பீடையே
சாம் யோரபிய் சரவண்டு நாஹ்









சனி காயத்ரி : 
கஹட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மண்டாஹ் பிரசொடையத்
அல்டேர்ணடே காயத்ரி : 
சனிச்சராய வித்மஹி
சாய புத்ராய தேமாஹி
தானோ மந்த பிரசொடையத்



No comments:

Post a Comment