Wednesday 4 December 2013

பிரார்த்தனை இடங்களும் பயன்களும்


பிரார்த்தனை இடங்களும் பயன்களும்


அத்தி மரத்தடியில் பூசை செய்வதால் பூமி லாபம் கிடைக்கும்.

வில்வ மரத்தின் அடியில் பூசை செய்தால் தனலாபம் கிடைக்கும்.

புளியமரத்தின் அடியில் பூசித்தால் மனச்சாந்தி கிடைக்கும்.

மாமரத்தினடியில் பூசை செய்தால் நல்ல மனைவி வாய்ப்பாள்.

துளசிவன மத்தியில் அமர்ந்து பூசித்தால் ஞானம் பெறலாம்.

நதிதீரத்தில் அமர்ந்து பூசை செய்தால் சிறந்த கல்வியைப் பெறலாம்.

நிலையான புகழை விரும்புபவர் மலையில் அமர்ந்து பூசை செய்ய வேண்டும்.

பசுவை விரும்புபவர்கள் பசு கொட்டகையில் இருந்து பூசை செய்யலாம்.

புத்திரலாபம் அடைய விரும்புபவர்கள் கர்ப்பகிரகத்தில் இருந்து பூசிக்கவும்.

அசோக மூலத்தில் இருந்து சபிப்பதால் வசியம் செய்யும் சக்தி ஏற்படும்

No comments:

Post a Comment