Tuesday 3 December 2013

Preventive and Post Cancer Curing Natural Medicine

காட்டு ஆத்தாப்பழம் - புற்றுநோய்க்கு எதிரி



இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும்,அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனஅப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்எனஅஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும்வயது வித்தியாசமின்றிபரவி வருவது புற்றுநோயேஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையைஉடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலானவிஷயமாக இருந்தாலும்அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிரபல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில்குடிகொண்டுள்ளதுமேலும் மருத்துவர்களுக்கும்ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்தநோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளதுஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகுஅதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால்ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

                              பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தநோயானது இரத்தப் புற்றுநோய்தோல் புற்றுநோய்எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்துமனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல்நுரையீரல்கணையம்சிறுநீரகம்,மூளைவாய்/பல் ஈறுகள்வயிறு(குடல்), ப்ரெஸ்ட்கருப்பைகருப்பை வாய்,உணவுக்குழாய்புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது.இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில்தாக்குவதும் உண்டுஅதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கெனஅறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன்பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில்மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில்உள்ளனஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர்கேரட்,தக்காளிலெமன் கிராஸ்மாதுளம்பழம்மரவள்ளிக்கிழங்குபப்பாளிப்பழம்பூண்டு,ப்ரோகோலிஅப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயேபுற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான்அவற்றில் மிக சக்திவாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பழம்கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப்புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றனஅவ்வளவு சக்திவாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும்கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும்தென்கிழக்கு ஆசியநாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
பக்கத்து நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம்கம்போடியாபிரேசில்,போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில்மட்டுமே உள்ளதுமலேஷியாஇந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெருவியாபாரிகள்கூட பழ ஜூஸ்ஷர்பத்மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வசாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள்மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம்வகைகளிலும்ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமானபழமாக பயன்படுத்தப்படுகிறதுஏன்நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளதுஆனால் பெரும்பாலான மக்கள்அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்குமலையாளத்தில் chakka என்பார்கள்பலாப்பழத்தைப் போன்ற முட்களும்,ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலாஆத்தாஎன்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிறது)
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறதுபழத்தின் மேற்புறத்தில்பலாப்பழத்தைப் போன்றுஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள்இருக்கும்இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும்அதிக பட்சம் 20-30 செ.மீ.வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட்,பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின்B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளனஅதன் இலைகளும்விதைகளும் வெவ்வேறுமருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளனகாலை நேரங்களில்பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாகஇருக்கும்.

                                       

"
காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும்குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே!அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள்யாராயினும்இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்அதுகேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்!
இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,

கடுமையான‌ குமட்டல்வாந்திஎடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப்போவது போன்றவை ஏற்படாதுஇது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச்சிகிச்சையான 'கீமோதெரபிபோலல்லாமல்பக்க விளைவுகள் இல்லாத வகையில்பாதுகாப்பான மருந்தாகவும்புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கிஅவற்றைஅழிப்பதாகவும் உள்ளது.

சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம்குறைந்துவலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறதுஅதனால் மற்றகொடிய நோய்களையும் எதிர்க்கிறது.

நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும்கண்பார்வையைமேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

* "
பூஞ்சைத் தொற்றுஎன்று சொல்லப்படும் Fungal Infection களையும்பாக்டீரியாதாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தம்நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய்ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள்வேர்கள்மரப்பட்டைதண்டுகள்,பூவிதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாகஉள்ளனஇதன் தாவரவியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும்அடைந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகஇந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில்,என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கேகொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடிபின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)
இலைகளின் பலன்கள்:

ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளைவைத்துஅதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின்தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.

தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்திநீரில்போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாகதொடர்ந்து கொடுத்தால் அமைதியானஉறக்கத்தைத் தரவல்லது.

இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்வயிற்றுப் புழுக்களைஅழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும்குழந்தைகளுக்கு ஏற்படும் மணல் வாரி அம்மை(அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்துஇதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாகஉடம்பில் தேய்த்துஉடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம்கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும்இவ்வாறு செய்வதால் மிக விரைவில்குணம் ஏற்படும்.
இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்அல்லது"அண்ணவண்ணா பழம்என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi" 
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum" 
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"
இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம்அல்லது நம்ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக்ஷர்பத்டெஸெர்ட்ஐஸ்க்ரீம் என எப்படிவேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment